shadow

கரையை கடந்தது ‘நாடா’ புயல். பாதிப்பு எதுவும் இல்லை.

nadaவங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ‘நாடா’ புயல் நேற்றிரவு காரைக்கால் அருகே கரையை கடக்கும் என வானிலை முன்னெச்செரிக்கை அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை காரைக்கால் அருகே கரையை கடந்தது.

‘நாடா’ புயல் கரையை கடக்கும்போது வலுவிழந்து காணப்பட்டதால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. இருப்பினும் அந்த பகுதியில் மழை தொடரும் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் அடுத்த 12 மணி நேரத்திற்கு மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையை பொருத்தவரை நேற்று இரவே மழை இல்லை. இன்று காலை முதல் வானம் தெளிவாக இருப்பதால் மழை வர வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. ஆயினும் தமிழகத்தின் சில பகுதிகள் புதுச்சேரி மற்றும் கேரள பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply