குடும்பத்துடன் தற்கொலை முயற்சி செய்த நாம் தமிழர் கட்சி பிரமுகர்
நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொருப்பில் உள்ள கார்மேகம் என்பவர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கூடலூரை அடுத்த நாடுகாணியை சேர்ந்தவர் கார்மேகம் என்ற 38 வயது நாம் தமிழர் கட்சி பிரமுகருக்கும் அவரது மனைவி வாணிஸ்ரீக்கும் சமீபத்தில் குடும்பத்தகறாறு ஏற்பட்டுள்ளது. இதனால் கார்மேகம் தனது குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இதுகுறித்த தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக 3 பேரையும் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சையின் பலனின்றி கார்மேகம் மரணம் அடைந்தார். இரு குழந்தைகளின் உயிர் ஊசலாடுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த வாணிஸ்ரீயும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வாணிஸ்ரீயை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு சிறிய குடும்பத்தகராறு ஒரு குடும்பத்தையே சின்னபின்னாமாக்கியுள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.