தேவையானவை:

கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 10 (அல்லது விருப்பத்துக்கேற்ப), தேங்காய் துருவல் – ஒரு கப், எள் – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள், கசகசா – சிறிதளவு,  கறிவேப்பிலை – 10 இலைகள், புளி – கொட்டைப் பாக்கு அளவு, தனியா – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

தேங்காய் துருவலை, வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும். கசகசா, எள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, தனியா, புளி ஆகியவற்றையும் எண்ணெய் விடாமல் தனித்தனியே கருகாமல் வறுக்கவும். காய்ந்த மிளகாயை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கவும். வறுத்த பொருட்களை ஆற வைத்து… பெருங் காயத்தூள், உப்பு சேர்த்து, சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.

இது, சூடான சாதத்துடன் சாப்பிட ஏற்றது. இந்தப் பொடியுடன் நீர் சேர்த்துக் கரைத்து, சட்னி போலவும் பயன்படுத்தலாம்

Leave a Reply