shadow

பாலியல் தொல்லை செய்த என் கணவரை ஏன் தாக்கவில்லை: நடிகைக்கு தொழிலதிபரின் மனைவி கேள்வி

‘தங்கல்’ படத்தில் அமீர்கானின் மகளாக நடித்த சைரா வாசிம் நேற்று முன் டெல்லியில் இருந்து மும்பைக்கு விமானத்தில் சென்றபோது தனக்கு பின்னால் உட்கார்ந்திருந்த நபர் ஒருவரால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீருடன் புகார் கூறியிருந்தார்

இந்த நிலையில் இந்த புகார் குறித்து விசாரணை செய்த போலீசார் விகாஸ் என்ற தொழிலதிபரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து விகாசின் மனைவி நடிகைக்கு ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.

நடிகையுடன் அவரின் தாயும் பயணம் செய்திருக்கும் நிலையில், என் கணவர் தவறாக நடந்து கொண்டிருந்தால் அவரை ஏன் அந்த நடிகை தாக்கவில்லை, கூச்சல் எழுப்பவில்லை…. இரண்டு மணி நேரம் கழித்து சமூக வலைதளங்களில் பதிந்தது ஏன்? இது முழுக்கமுழுக்க விளம்பரத்துக்காகச் செய்தது’ என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். தொழிலதிபரின் மனைவி டுவிட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply