என் 15 மாத மகளுக்கு சகோதரி கிடைத்துவிட்டார். ஃபேஸ்புக் நிறுவனர் உற்சாகம்
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் மற்றும் பிரிசில்லா தம்பதிக்கு சமீபத்தில் ஒரு மகள் பிறந்தார். பிறக்கும்போதே மில்லியன் பாப்பாவாக பிறந்த அந்த தேவதைக்கு தற்போது 15 மாதம் வயதாகிறது. இந்நிலையில் பிரிசில்லா மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த தகவலை மார்க் தனது ஃபேஸ்புக்கில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
சகோதரி பாசம் என்பதற்கு ஈடு இணையே இல்லை. என்னுடைய மூன்று சகோதரிகளால்தான் இந்த உயர்ந்த நிலைக்கு வந்துள்ளேன். அதுபோல் பிரிசில்லாவும் சகோதரியின் உதவியால்தான் நல்ல குணங்களை பெற்றுள்ளார்.
அதேபோல் எங்கள் மகளுக்கும் ஒரு இனிய சகோதரி விரைவில் உலகிற்கு வரவுள்ளார். எங்களுக்கு பிறக்கபோகும் செல்ல குழந்தையும் தனது சகோதரியுடன் வலிமையாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’ என்று மார்க் உருக்கத்துடன் பதிவு செய்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.