ஷார்ஜாவில் இன்று நடைபெற்ற மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. இதன் மூலம் மும்பை அணி தான் விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் உள்ளது.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. போலார்டு 33 ரன்களும், கவுதம் 22 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி நிதானமாக விளையாடி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து தனது வெற்றியை பதிவு செய்தது. முரளிவிஜய் 40 ரன்களும், பீட்டர்சன் 26 ரன்களும் எடுத்தனர். நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உதவியுடன் 40 ரன்கள் எடுத்து டெல்லி அணியின் வெற்றிக்கு வித்திட்ட முரளிவிஜய் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்யும் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 145 ரன்கள் எடுத்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.