shadow

1aஐ.பி.எல். தொடர் கிரிக்கெட் போட்டிகளில் நேற்று நடந்த போட்டியில் பெங்களூர் அணியை மும்பை அணி மிக எளிதாக 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 59 ரன்களும், பொல்லார்டு 43 ரன்களும், கெளதம் 30 ரன்களும் எடுத்தனர்.

188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கெய்ல் மற்றும் பட்டேலில் அதிரடியால் நல்ல தொடக்கம் அமைந்தது. கெய்ல் 38 ரன்களும், பட்டேல் 26 ரன்களும் எடுத்தனர். பின்னர் வந்த கேப்டன் விராத் கோஹ்லி 35 ரன்களும், ரொஸ்ஸாவ் 24 ரன்களும் எடுக்க மும்பை அணி 20 ஓவர்களில் 168 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. பெங்களூர் அணிக்கு இது ஐந்தாவது தோல்வி ஆகும். ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வானார்.

Leave a Reply