மும்பை போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வந்த சத்யபால் சிங் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளார். நேற்று மீரட் நகரில் நடந்த பாரதிய ஜனதாவின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட சத்யபால் சிங், அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

மும்பை போலீஸ் கமிஷனர் சத்யபால் சிங், கடந்த 1980ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் பட்டம் பெற்றவர். பல்வேறு அரசு பணிகளில் தொடர்ந்த அவர் சில மாதங்களுக்கு முன்னர் மும்பை போலீஸ் கமிஷனராக பதவியேற்றார்.

நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் தான் அரசியலில் குதித்ததாகவும், பொதுமக்களுக்கு தன்னால் ஆன தொண்டு புரியவே பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் குதித்ததாகவும் சத்யபால் சிங் கூறியுள்ளார்.

சத்யபால் சிங் வரும் 2015ஆம் ஆண்டு ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் மும்பை தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply