shadow

Rakesh_Maria_PTI_360காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு பழிவாங்க மும்பை நகரில் கடும் தாக்குதல் நடத்துவோம் என தீவிரவாதிகள் மும்பை போலிஸ் கமிஷனர் ராகேஷ் மரியாவுக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே மும்பை நகரம் கடந்த 1993ஆம் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல், மற்றும் 2008ஆம் ஆண்டு மும்பை தாஜ் ஓட்டலில் நடத்திய தாக்குதல் ஆகியவற்றினால் கடும் பாதிப்பு அடைந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்துவோம் என நேற்று வந்த மிரட்டல் கடிதத்தினால் மும்பை மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்த மிரட்டல் கடிதத்தில், 1993ஆம் ஆண்டு நடத்திய தாக்குதலை விட பலமடங்கு ஆக்ரோஷமாக தாக்குதல் நடத்துவோம் என்றும், முடிந்தால் தடுத்து நிறுத்திப்பாருங்கள் என்றும் மிரட்டல் விடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் முஜாகிதீன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் இந்திய முஜாகிதீன் தீவிரவாதிகள் மீது மும்பை போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர்.இந்த மிரட்டல் கடிதம் காரணம் மும்பை நகரத்தில் போலீஸார் உஷார் நிலையில் உள்ளனர்.

Leave a Reply