ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: தோனியின் புனே அணிக்கு மேலும் ஒரு தோல்வி
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தோனி தலைமையிலான புனே அணிக்கும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி, புனே அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. இதனால் முதலில் களத்தில் இறங்கிய புனே அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. திவாரி 57 ரன்களும், ஸ்மித் 45 ரன்களும் எடுத்தனர்.
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களத்தில் இறங்கிய மும்பை அணி, கேப்டன் ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த ரோஹ்த் சர்மா, ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.