shadow

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: ஆம்லா சதம் வீண். மும்பை அபார வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி அபாரமாக வெற்றி பெற்று புள்ளிகள் அடிப்படையில் முதலிடத்தை தக்க வைத்து கொண்டது.

நேற்று இந்தூரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் ஆம்லா அபாரமாக விளையாடி 104 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட் ஆகாமல்  இருந்தார். இந்த அணி 20 ஓவர்களீல் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது.

199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை விரட்டிய மும்பை, முதல் பந்துமுதல் அடித்து ஆடத்தொடங்கியது. பட்லர், பார்த்தீவ் பட்டேல் மற்றும் ராணா ஆகியோர்களின் அதிரடி ஆட்டத்தால் மும்பை அணி 15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கள் மட்டுமே இழந்து 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 37 பந்துகளில் 77 ரன்கள் அடித்த பட்லர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 10 புள்ளிகளை எடுத்துள்ள மும்பை அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

Leave a Reply