ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி: சொந்த மைதானத்தில் கொல்கத்தா அதிர்ச்சி தோல்வி
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் முதல் போட்டியில் புனேவிடம் தோல்வி அடைந்த மும்பை அணி நேற்று கொல்கத்தா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்யுமாறு கொல்கத்தா அணியை கேட்டுக்கொண்டது.
இதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 187 ரன்கள் குவித்தது. கேப்டன் காம்பீர் 64 ரன்களும், பாண்டே 52 ரன்களும் குவித்தனர்.
188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 188 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா அவுட் ஆகாமல் 84 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
இன்றைய போட்டியில் குஜராத் மற்றும் புனே அணிகள் மோதுகின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.