ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: மும்பைக்கு மேலும் ஒரு விக்கெட். பெங்களூரை வீழ்த்தியது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி, பெங்களூர் அணியை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மும்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்தது.
171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய மும்பை அணி, 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 171 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோஹித் சர்மா 62 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதினை தட்டிச்சென்றார். இன்று குஜராத் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.