shadow

ரோஹித் சர்மா அதிரடியால் மும்பைக்கு கிடைத்த முதல் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது.

டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராத் கோஹ்லி முதல் பந்துவீச தீர்மானித்ததால் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, தொடக்க ஆட்டக்கார்ரகளான யாதவ் மற்றும் கிஷான் விக்கெட்டுக்களை இழந்தது. இருப்பினும் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 94 ரன்கள் குவித்தார். அதேபோல் லீவீசும் அதிரடியாக விளையாடியதால் அந்த அணி20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது

இந்த நிலையில் 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடியது. ஆனால் டீகாக் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. டீகாக் 92 ரன்கள் குவித்தார்.

94 ரன்கள் குவித்த மும்பை கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Leave a Reply