கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தேர்தல் பணியை சரியாக செய்யாத திமுக நிர்வாகிகள் 33 பேர்களை சமீபத்தில் திமுக தலைமை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட அனைவரும் தகுந்த விளக்கம் கூறினால் அவர்களுடைய சஸ்பெண்ட் உத்தரவு ரத்து என ஆகும் திமுக தலைமை அறிவித்திருந்தது.
இந்நிலையில் திமுகவின் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் கொடுத்த விளக்கத்தை கட்சித்தலைமை ஏற்றுக்கொள்ளாததால் அவர் நிரந்தரமாக கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று தெரிவித்தார். அதே நேரத்தில் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், இன்பசேகரன் ஆகியோர் கொடுத்த விளக்கத்தை ஏற்று அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக அவர் மேலும்கூறினார்.
முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதால் அவருடைய ஆதரவாளர்கள் கட்சித்தலைமை மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.