shadow

மோடிக்கும் ராகுலுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்: மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு

சமீபத்தில் மத்திய இணை மந்திரியும் பா.ஜ.க. மூத்த தலைவருமான நரேந்திர சிங் தோமர் பொதுகூட்டம் ஒன்றில் பேசுகையில், ‘பிரதமர் நரேந்திர மோடிக்கும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. அது என்னவென்றால் தாடியில் இருக்கும் முடிக்கும், வாலில் இருக்கும் முடிக்கும் உள்ள வித்தியாசம் போன்றது அது. எனவே ராகுலால் மோடியாக முடியாது என கூறினார்.

நரேந்திர சிங் தோமரின் இந்த சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், நரேந்திர சிங் தோமர் தன்னுடைய பேச்சுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த விஷயத்தில் பிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார்? மூத்த தலைவர், அதிலும் நாடாளுமன்றத்தில் பேசுபவர் ஏன் இதுபோல் மோசமான பேச்சுக்களை பேசுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply