shadow

‘பாகுபலி’ ராணியை போல் தண்ணீரில் தத்தளித்த மகனை கையில் ஏந்தி காப்பாற்றிய தாய்

5சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன பாகுபலி’ திரைப்படத்தில் ‘பாகுபலி’யை காப்பாற்றுவதற்காக ராணி ரம்யாகிருஷ்ணன் குழந்தையை கையில் ஏந்தியவாறு தண்ணீரில் மூழ்கி உயிர் துறப்பார்.

திரைப்படத்தில் வந்த இந்த் காட்சி உண்மையிலேயே அமெரிக்காவில் நடந்துள்ளது. படகு சவாரி செய்து கொண்டிருந்த செல்சி ரூஸ்லெஸ் என்ற பெண், திடீரென தனது இரண்டு வயது மகன் தண்ணீரில் விழுந்துவிட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே தன்னுயிரையும் பொருட்படுத்தாது தண்ணீருக்கு விழுந்து தத்தளித்த தனது மகனை காப்பாற்றினார்.

ஆனால் அவர் குதித்த இடத்தில் தலைக்கு மேல் உடல் முழுவதும் மூழ்கும் அளவுக்கு அதிகமான தண்ணீர் இருந்தது. இருந்தும் மகனை காப்பாற்ற அவனை தனது கையில் உயரமாக தாங்கி பிடித்தபடியே தண்ணீரில் மூழ்கினார்.

இதற்கிடையே மற்றொரு படகில் இருந்த அவரது குடும்பத்தினர் விரைந்து வந்து அவரது கையில் இருந்த 2 வயது சிறுவனை உயிருடன் மீட்டனர். ஆனால் ரூஸ்செல் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Leave a Reply