27 வயதில் 8 குழந்தை பெற்ற பெண்ணின் கணவர் திடீர் மரணம்
இங்கிலாந்து நாட்டில் North Wales என்ற பகுதியை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் சமீபத்தில் தனது 8வது குழந்தையை பெற்றெடுத்தார். இந்த குழந்தை பிறந்த ஒருசில நாட்களில் 8 குழந்தைகளை பெற்ற பெண்ணின் கணவர் திடீரென மரணம் அடைந்ததால் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளார் அந்த பெண்மணி
நார்த்வேல்ஸ் பகுதியை சேர்ந்த ஜேம்ஸ்-க்ளோக்ரீன் தம்பதியினர்களுக்கு வரிசையாக 8 எட்டு குழந்தைகள் பிறந்துள்ளன. 18 வயதில் திருமணமான க்ளோ க்ரீனுக்கு தற்போது 27 வயதுதான் ஆகிறது. ஆனால் அதற்கு எட்டு குழந்தைகளை அவர் இடைவிடாமல் பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் இரவு படுக்கையில் தூங்கிய அவரது கணவர் ஜேம்ஸ் காலையில் எழுந்திருக்கவில்லை. தூக்கத்திலேயே அவர் மரணம் அடைந்துவிட்டார். திடீரென கணவரை இழந்த சோகம் தாங்காமல், எட்டு குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்துள்ளார் க்ளோ க்ரீன்.
எட்டு குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு அவரால் வெளியில் சென்று வேலை பார்ப்பது சாத்தியமில்லை என்பதால் தனக்கு அரசு நிதியுதவி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கையை இங்கிலாந்து அரசு ஏற்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Leave a Reply
You must be logged in to post a comment.