shadow

30BOYஐந்தாவது மாடியில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்த 4 வயது சிறுவன் ஒருவன் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் ஒன்று சீனாவில் சமீபத்தில் நடந்துள்ளது.

சீனாவில் உள்ள  Yau Ma Tei என்ற பகுதியில் நேபாளத்தை சேர்ந்த ஒரு குடும்பம் வாழ்ந்து வருகிறது. ஐந்தாவது மாடியில் வசித்து வந்த இவர்கள் வீட்டில் இருந்த நான்கு வயது சிறுவன் ஒருவன் வீட்டின் அருகே வைக்கப்பட்டிருந்த டிவி ஆண்டெனாவில் ஏறி விளையாடியபோது எதிர்பாராத காரணத்தால் ஐந்தாவது மாடியில் இருந்து தவறி கீழே இருந்த கார் ஒன்றின் மீது விழுந்ததாகவும், ஆனால் பெரிய காயங்கள் எதுவும் இன்றி அந்த சிறுவன் அதிசயமாக உயிர் பிழைத்ததாகவும் கூறப்படுகிறது.

இவ்வளவு பரபரப்பான சூழ்நிலையிலும் தனது மகன் கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது கூட தெரியாமல் அந்த சிறுவனின் தாய் வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்ததாகவும், மீட்புக்குழுவினர் சென்று தாயிடம் தெரிவித்தபோதுதான் அவருக்கே இந்த விஷயம் தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது. மகனை கவனிக்காமல் பொறுப்பின்றி டிவி பார்த்து கொண்டிருந்த சிறுவனின் தாய் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

சிறுவன் விழுந்த காரின் மீது இருந்த ஒருசில மென்மையான பொருட்கள்தான் சிறுவனின் உயிரை காப்பாற்றியதாக அந்த பகுதியில் இருந்தவர்கள் கருத்து தெரிவித்தனர்.

Leave a Reply