shadow
5 மாநிலங்களை புரட்டியெடுத்த புழுதிப்புயல்: 100க்கும் மேற்பட்டோர் பலி

5 மாநிலங்களை புரட்டியெடுத்த புழுதிப்புயல்: 100க்கும் மேற்பட்டோர் பலி

வட மாநிலங்களான ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மத்தியப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நேற்றிரவு புழுதி புயல் திடீரென தாக்கியது. இந்த தாக்குதலில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மட்டும் புழுதி புயலில் சிக்கி 64 பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

அதேபோல் ராஜஸ்தானில் 31 பேர்களும், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், பஞ்சாப், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தலா 2 பேர்களும் பலியாகியுள்ளனர்.  
புழுதி புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் விரைந்து அளிக்கும்படி அந்தந்த மாநில அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Leave a Reply