டிடிவி தினகரனிடம் தீபா ரூ.1500 கோடி பேரமா?
ஏற்கனவே அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் பிரிந்து பெருவாரியான கட்சி தொண்டர்களையும் நிர்வாகிகளையும் பிரித்துவிட்ட நிலையில் இருக்கும் தொண்டர்களையாவது காப்பாற்றி கொள்ளும் முடிவுக்கு அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
எனவே தீபா ஆரம்பித்த பேரவையால் அதிமுக ஓட்டுக்கள் மூன்றாக பிரியாமல் இருக்க தீபாவிடம் பேரம் பேசப்பட்டதாகவும், தீபா தரப்பில் இருந்து ரூ.1500 கோடி கேட்கப்பட்டதாகவும் வதந்தி பரவி வருகிறது.
தினகரன் தரப்பில் இருந்து ரூ.100 கோடி மற்றும் ஐதராபாத் திராட்சை தோட்டம் ஆகியவை தருவதற்கு தயாராக இருந்ததாம். இதற்கு தீபாவின் கணவர் ஒப்புக்கொண்டாலும் தீபா ஒப்புக்கொள்ளாததால் தீபாவுக்கு அவரது கணவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதை பயன்படுத்தி மாதவனை அதிமுகவின் முக்கிய புள்ளி கைக்குள் போட்டுக்கொண்டு புதுக்கட்சி ஐடியா கொடுத்து தீபா கட்சியை காலி செய்ய கட்டளையிட்டுள்ளதாம். இதெல்லாம் டுவிட்டரில் பரவி வரும் காமெடியான வதந்திகள். இந்த வதந்திகள் எந்த அளவுக்கு உண்மை என்பது போகப்போக தெரியவரும்
Leave a Reply
You must be logged in to post a comment.