‘தொப்பிக்கு ஓட்டு போடுங்கள்’ ரூ.4000 கொடுத்து ஓட்டு கேட்கும் மர்ம நபர் யார்?
முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தொகுதியில் டிடிவி தினகரன் ‘தொப்பி’ சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து மதுசூதனன் ‘இரட்டை மின்கம்பம்’ சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் ‘தொப்பி’ சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தொகுதி முழுவதும் தினகரன் தரப்பினர் பணம் கொடுத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுகுறித்த ஆதாரங்களையும் அவர்கள் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வருகின்றனர். ஆனால் தேர்தல் கமிஷன் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் எதிர்க்கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் ஆர்.கே.நகரில் தொப்பிக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறியபடியே ஒரு நபருக்கு ரூ.4000 கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பின்னராவது தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
//www.youtube.com/watch?v=SAOkNHrvUqU&feature=youtu.be
Leave a Reply
You must be logged in to post a comment.