ரஷ்யாவில் தன்னைவிட்டு பிரிந்து சென்ற மனைவி மீண்டும் குடும்பம் நடத்த வர மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவர் ஒருவர் தனது மனைவியை உயிரோடு தீ வைத்து கொளுத்திய சம்பவம் அப்பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த ஆனா எபிமோவ் என்ர 25 வயது பெண், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஆனா எபிமோவ் வேலை செய்யும் சூப்பர் மார்க்கெட்டிற்கு வந்த அவரது கணவர் அலெக்ஸாண்டர் மீண்டும் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் ஆனா எபிமொவ் கணவருடன் செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் அலெக்ஸாண்டர் தனது மனைவியின் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்ததாகவும், அவர் பரிதாபமாக கதறியபடி சூப்பர் மார்க்கெட்டிலேயே தீயில் கருகி பலியானதாகவும் அதிர்ச்சி தரும் செய்தி வெளிவந்துள்ளது.
மனைவியை தீ வைத்து கொளுத்திய கணவர் அலெக்ஸாண்டர் மதுபோதையில் இருந்ததாகவும், அவரை போலீஸார் கைது செய்தபோதும் தன் மீது எந்த தவறும் இல்லை என்றும் தனது மனைவி தான் அழைத்தபோது வராததால்தான் இந்த விபரீதமே ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.