shadow

8ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான ‘விக்ரமசிங்ஹா’ படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் ஐதராபாத் நகரில் நடந்தது. இந்த விழாவில் ஆந்திராவின் புகழ்பெற்ற நடிகரும், ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான மோகன்பாபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்த விழாவில் பேசிய மோகன்பாபு, “ரஜினிகாந்த் என்னுடைய சிறந்த நண்பர்களில் ஒருவர். நண்பரான அவரை சம்மந்தியாக்க விரும்பினேன். ஆம் அவரது மகள் செளந்தர்யாவை எனது மருமகளாக்க நான் விரும்பினேன். அதற்கு லதா ரஜினிகாந்த்தும் ஒப்புதல் கொடுத்திருந்தார். ஆனால் எனது ஆசை நிறைவேறாமல் போனது. இதற்காக நான் சிறிதும் வருத்தப்படவில்லை. ஏனெனில் திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ஒன்று என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு” என்று கூறினார்.

மோகன்பாபுவின் இந்த பேச்சால் விழா மேடையில் இருந்த ரஜினி உள்பட அனைவரும் சிறிது நேரம் அதிர்ச்சி அடைந்தனர். செளந்தர்யா ரஜினிகாந்துக்கு கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி அஸ்வின் என்பவருடன் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply