கடந்த பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று இந்திய பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, பிரதமர் பதவியேற்றபின்னர் வரும் 29ஆம் தேதி முதல்முறையாக சென்னை வருகிறார். அவரது வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வரும் 30ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் ஏவப்படுகிறது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. ராக்கெட் ஏவப்படுவதை நேரில் பார்க்க பிரதமர் வரும் 29ஆம் தேதி டெல்லியில் இருந்து தனிவிமானத்தில் கிளம்பி சென்னை வருகிறார். பின்னர் சென்னையில் இருந்து ஸ்ரீஹரிகோட்டாவிற்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். ஸ்ரீஹரிகோட்டாவில் இரவு தங்கும் பிரதமர் 30ஆம் தேதி ராக்கெட் ஏவப்படுவதை நேரில் பார்த்துவிட்டு அதன்பின்னர் மீண்டும் சென்னை விமான நிலையம் வந்து டெல்லிக்கு புறப்படுகிறார்.
சென்னை வரும் பிரதமருக்கு விமான நிலையத்தில் தமிழக அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. முதல்வர் ஜெயலலிதா பிரதமரை நேரில் வரவேற்பார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.