இன்று இரவு 8 மணிக்கு என்ன சொல்லப்போகிறார் பிரதமர் மோடி? பரபரப்பு தகவல்

பாரத பிரதமர் மோடி கடந்த 19ஆம் தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றிய போது அனைவரும் மார்ச் 22ஆம் தேதி சுய ஊரடங்கு உத்தரவை கடை பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

அவரது வேண்டுகோளுக்கு இணங்கி இந்தியா முழுவதும் அன்றைய தினம் சுய ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார் இன்றைய தினம் அவரது உரையில் சில கண்டிப்பான கோரிக்கைகளை மக்கள் முன் வைப்பார் என்று கூறப்படுகிறது

கொரோனா வைரஸை ஒழிக்க மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில கோரிக்கைகளை அவர் கண்டிப்புடன் முன்வைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி என்ன சொல்லப் போகிறார் என்பதை அறிய நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply