டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்த மோடியின் தாயார்
கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், நர்சுகள் ஆகியோர் தன்னலம் கருதாது 24 மணி நேரமும் குடும்பத்தை கூட கவனிக்காமல் பணி செய்து வருகின்றனர்
அவர்களது அர்ப்பணிப்பு திறனுள்ள பணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று மாலை 5 மணிக்கு அனைவரும் வீட்டின் முன் வந்து கைதட்டல் ஒலி எழுப்ப வேண்டும் என பிரதமர் மோடி அவர்கள் கேட்டுக்கொண்டார்
இதனை அடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் வீட்டின் முன் வந்தும், வீட்டு பால்கனியில் இருந்தும் கைதட்டி மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் குஜராத்தில் உள்ள பிரதமர் மோடியின் தாயார் நேற்று சரியாக ஐந்து மணிக்கு தட்டை எடுத்து அதில் ஒலி எழுப்பி, மருத்துவ சேவை செய்து வரும் மருத்துவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.