shadow

மியான்மர் தலைவர் ஆங் சான் சூகியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

9பாரத பிரதமர் நரேந்திரமோடி 14-வது ஆசியான் மற்றும் 11-வது கிழக்கு ஆசிய மாநாடு நடைபெறும் லாவோஸ் நாட்டிற்கு பயணம் செய்துள்ளார். இந்த மாநாடு இன்று தொடங்கியுள்ள நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மியான்மர் நாட்டின் சிறப்பு ஆலோசகர் ஆங் சான் சூகியை பிரதமர் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்தியா-மியான்மர் இடையிலான உறவுகள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.

மேலும் இந்த சந்திப்பின்போது, இந்தியா-மியான்மர் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சியாளர்கள் நடத்தும் போராட்டம் ஆகியவை குறித்து இருவரும் பேசியதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார்.

மேலும் பால் உற்பத்தி, விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் பருப்பு வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தம் குறித்தும் இருவரும் கலந்துரையாடினர். பேச்சுவார்த்தையின் முடிவில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ஆங் சான் சூகி, விரைவில் இந்தியா வரவிருப்பதாக தெரிவித்தார்.

ஏற்கனவே அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஜப்பான் அதிபர் ஷின்ஸா அபே ஆகியோரை மோடி சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply