பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி இன்று ஒரு நாள் பயணமாக சென்னை வந்துள்ளார். அவர் வருகையையொட்டி சென்னை மாநகர் முழுவதுவம் கடும் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. தீவிரவாதிகள் மிரட்டல் காரணமாக நேற்றிரவு முதலே தீவர வாகன தணிக்கை செய்தனர். சென்னை பல்கலைகழகத்தில் நடைபெறும் அறக்கட்டளை விழா ஒன்றில் பங்கேற்று உரையாற்றவுள்ளார் மோடி. இதற்கிடையே மாலை 3 மணிக்கு விமான நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் அவர் பேசினார்.

காங்கிரஸ் அல்லாத அரசை உருவாக்குவதே இந்திய மக்களின் விருப்பமாக உள்ளது. மக்களின் ஆசையை நிறைவேற்றுவதே பாஜகவின் ஆசை.  தற்போது இந்தியா ஊழலில் சிக்கி  சின்னபின்னமாகி கிடக்கிறது. அதனை முதலில் சரி செய்தாலே மக்கள் நல்வழிபடுத்துப்படுவர்கள் என்றார் மோடி.

Leave a Reply