shadow

rathan tataநமது திறமையை நாம் வளர்த்துக்கொண்டாலே போதும். சீனாவை பார்த்து தேவையில்லாமல் அச்சப்பட தேவையில்லை என டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா தெரிவித்தார்.
 
சென்னை மேலாண்மை அமைப்பு சார்பில், தொழில் துறையில் சிறந்தவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கும் விழா நடத்தப்படுவது வழக்கம். தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு இந்த ஆண்டிற்கான விருது, நேற்று சென்னையில் வழங்கப்பட்டது. சென்னையில் மிக பிரமாண்டமாக நடந்த விழாவில் அமால்கமேஷன்ஸ் குழுமத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, இந்த விருதை ரத்தன் டாடாவுக்கு வழங்கினார்.
 
இந்த விருதை பெற்று கொண்ட ரத்தன் டாடா பின்னர் உரையாற்றுகையில் ”சீனாவை பார்த்து தேவையில்லாமல் அச்சப்படுவதை தவிர்த்து நமது திறமையை நாம் நன்றாக வளர்த்துக்கொண்டாலே போதும். தொழிற்துறையில் அபார வளர்ச்சி பெறலாம்.

நாம் நல்ல தரமான பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். தொழிலில் போட்டி இருக்கலாம், பொறாமை இருக்க கூடாது. மேலும், நமது நிறுவனங்களுக்குள் நெருக்கமும், ஆதரவும் அவசியம்” என்று அவர் பேசினார்.

Leave a Reply