ரூ.1கோடியை அரசு எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது: முக ஸ்டாலின்

தமிழகத்தில் ஊரடங்கு குறித்து உரிய முடிவை இனியும் காலதாமதம் செய்யாமல் முன்கூட்டியே அறிவியுங்கள் என்றும், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1கோடியை அரசு எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

எம்எல்ஏக்களின் தார்மீக உரிமையை தமிழக அரசு பறித்திருப்பது சரியல்ல என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் இந்த கடிதத்திற்கு முதல்வர் என்ன பதிலளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply