ஒரே நாளில் ஒரே வார்டில் மூணு பேர் எப்படி இறந்தார்கள்? முக ஸ்டாலின் கேள்வி\

கன்னியாகுமரியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இதுகுறித்து ஏற்கனவே தமிழக சுகாதாரத் துறை விளக்கம் அளித்தது. உயிரிழந்த மூவருக்கும் வெவ்வேறு நோய்கள் இருந்ததே அவர்களுடைய உயிரிழப்புக்கு காரணம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது

இந்த நிலையில் தற்போது கன்னியாகுமரியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் ஒரே வார்டில் 3 பேர் அடுத்தடுத்து இறந்தது எப்படி? என்று திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான முக ஸ்டாலின் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தலைமை செயலாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் கேள்வி கேட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

Leave a Reply