பிரதமர் மோடி முடிவை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்: திமுக தலைவர் ஸ்டாலின்
கொரோனா வைரசை தடுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவு என்ற பிரதமரின் முடிவை மனப்பூர்வமாக நான் வரவேற்கிறேன் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு தனித்திருத்தல் தவிர வேறு வழியில்லை என்பதால் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டுமென்ற பிரதமரின் முடிவு சரியானது என்று அவர் தெரிவித்துள்ளார்
அதேநேரத்தில் ஏழை எளிய மக்களின் அன்றாட உணவுக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.