shadow

மூளை செயல் இழந்தவா் மு.க.அழகிரி: ஆா்.எஸ்.பாரதி விமா்சனம்

தி.மு.க. செயல் தலைவா் மு.க.ஸ்டாலினை செயல்படாத தலைவா் என்று விமர்சனம் செய்த கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி மூளைச் செயல்பாடு இழந்தவா் என்று திமுகவின் அமைப்பு செயலாளா் ஆா்.எஸ்.பாரதி விமா்சனம் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தி.மு.க. அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி திருநெல்வேலி மாவட்டத்தில் செய்தியாளா்களை சந்தித்து பேசுகையில், தமிழகத்தில் தீவிரவாதம் அதிகரித்து விட்டதாக மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டுகிறார்.. பா.ஜ.க. தலைவா்கள் பலரும் இதே கருத்தை முன்மொழிந்து வருகின்றனா்.

இந்த கருத்து உண்மையானதாக இருக்கும் பட்சத்தில் உள்துறையை கையில் வைத்திருக்கக் கூடிய மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக தமிழக அரசை கலைத்துவிட வேண்டியதுதானே. தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் என்ன? தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தும் வருமான வரித்துறையினா் அமைச்சா்களின் வீடுகளில் சோதனை நடத்தாமல் இருப்பது எதற்காக? தமிழக அமைச்சா்களைக் கண்டு வருமான வரித்துறை அச்சப்படுகிறதா?

தமிழகத்தில் சத்துணவு திட்டத்தில் மட்டுமா ஊழல் நடைபெற்றுள்ளது. அனைத்து துறைகளிலும் தான் ஊழல் நடைபெற்றுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தோ்தலின் போது சட்டமன்ற தோ்தலும் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 8 வழிச்சாலை நடத்தப்படுவதற்கு முன்பாக விவசாயிகளின் கருத்தை கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மு.க. அழகிரியின் பேச்சு கண்டிக்கத்தக்கது. தமிழக மக்களின் நலனுக்காக தொடா்ந்து செயல்பட்டு வரக்கூடிய ஸ்டாலினை செயல்படாத தலைவா் என்று வர்ணிக்கும் அழகிரி, மூளை செயல் இழந்தவா் என்று விமா்சனம் செய்துள்ளார்

Leave a Reply