shadow

ஈராக்கில் தவறுதலாக தாக்குதல் நடத்திய அமெரிக்கா: போலீஸ் உள்பட 8 பேர் பலி

ஈராக் நாட்டில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது அமெரிக்க ராணுவம் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நேற்றிரவு தவறுதலாக நடத்திய தாக்குதலால் போலீஸ்காரர்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இதற்கு ஈராக் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈராக் நாட்டில் அல்-பக்தாதி என்ற நகரில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்ததாக வந்த தகவலை அடுத்து அந்த இடத்தின் மீது அமெரிக்க போர் விமானங்கள் நேற்று குண்டுமழை பொழிந்தன.

ஆனால் இந்த குண்டுகள் தீவிரவாதிகளின் பதுங்கு குழிக்கு பதிலாக தவறுதலாக யுப்ரேட்ஸ் நகரில் பொதுமக்கள் வாழும் பகுதியில் விழுந்தது. இதனால் போலீசாரின் பாதுகாப்பு வாகனங்களின் அணிவகுப்பின் மீது விழுந்து வெடித்தது. இந்த தாக்குதலில் 5 போலீஸ் அதிகாரிகள் உள்பட 8 பேர் பலியாகினர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இராக் அரசு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

Leave a Reply