உலகெங்கிலும் உள்ள பிரபலங்களை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் காரணமாக அமெரிக்காவை சேர்ந்த ஒரு இளம்பெண் பரிதாபமாக மரணம் அடைந்தார்.
அமெரிக்காவில் உள்ள மிஸ்ஸிசிப்பி என்ற நகரில் உள்ள 17 வயது நான்சி என்ற இளம்பெண் ஐஸ் பக்கெட் குளியல் நடத்த முடிவு செய்தார். இவர் தன்னுடைய இளைய சகோதரியுடன் கீழே நிற்க அவரது அக்காள் கணவர், தனது வீட்டில் பால்கனியில் இருந்து பக்கெட் நிறைய ஐஸ் தண்ணீரை அவர்கள் மீது கொட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த காட்சியை வீடியோ எடுக்க அவரது அக்கா கேமராவுடன் தயாராக இருந்தார்.
இந்நிலையில் பக்கெட் நிறைய இருந்த ஐஸ் தண்ணீரை கொட்ட முயற்சித்த போது பக்கெட் கை நழுவி கீழே நின்று கொண்டிருந்த நான்சியின் தலையில் விழுந்தது. இதில் நான்சியின் கழுத்தெலும்பு முறிவடைந்தது. உடனடியாக மிஸ்ஸிசிப்பி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சில மணிநேரத்தில் அவர் மரணம் அடைந்தார்.
ஐஸ் பக்கெட் சேலஞ்ச்சில் இடம்பெறுபவர்களுக்கு இது ஒரு விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்று நான்சியின் சகோதரி கண்ணீருடன் செய்தியாளர்களிடம் கூறினார்.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1tDnXeL” standard=”//www.youtube.com/v/x7YOdrMw7Q0?fs=1″ vars=”ytid=x7YOdrMw7Q0&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep8318″ /]
Leave a Reply
You must be logged in to post a comment.