shadow

2 நாட்களுக்கு முன் காணாமல் போன ‘ஸ்னாப் டீல்’ நிறுவன இளம்பெண் கண்டுபிடிப்பு
deepti
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஸ்னாப் டீல் நிறுவனத்தில் பணிபுரிந்த 25 வயது இளம்பெண் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் திடீரென காணாமல் போன நிலையில் தற்போது அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை அன்று மாலை டெல்லியில் வேலையில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் ஸ்னாப் டீல் ஊழியர் தீப்தி சர்னா திடீரென காணாமல் போனார். காணாமல் போன தீப்தி சர்னா, இன்று காலை தான் பத்திரமாக இருப்பதாகவும், ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிப்பட்டில் இருந்து டெல்லிக்கு வரும் ரயிலில் வந்துகொண்டிருப்பதாகவும் தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக தீப்தி சர்னா காணாமல் போனதால் கவலையுடன் இருந்த அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். அவருடைய குடும்பத்தினர் போலிசாருடன் சேர்ந்து ரயில் நிலையம் வரை சென்று தீப்தி சர்னாவை வரவேற்றனர்

Leave a Reply