6 நாட்கள் எறும்புகளை தின்று உயிர் பிழைத்த ஆஸ்திரேலிய வேட்டைக்காரர்
பாலைவனத்தில் தொலைந்த போன வேட்டைக்காரர் ஒருவர் உண்ண உணவு இன்றி வெறும் எறும்புகளை மட்டுமே தின்று உயிர் பிழைத்துள்ளார். ஆறு நாட்களுக்கு பின்னர் அவரை மீட்புப்படையினர் மீட்டபோது இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் மேற்கு பதியை சேர்ந்த காரர் ரெக் பாக்கர்டே என்ற 62 வயது நபரின் ஒட்டகம் தொலைந்து போனதால், அந்த ஒட்டகத்தை தேடி தனது சகோதரருடன் பாலைவனத்திற்கு காரில் சென்றார். ஆனால் ஒருசில பகுதிகளில் கார் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால்,இருவரும் இரு திசைகளில் நடந்தே ஒட்டகத்தை தேடினர். இதில் காரர் ரெக், வழிதவறி தொலைந்து போனார்.
இந்த தகவல் அவரது சகோதரர் மூலம் தெரிய வந்தவுடன் உள்ளூர் போலீஸாரும் மீட்புப்படையினர்களும் பாலைவனத்தின் பல்வேறு பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் தேடினர். இறுதியில் 6 நாட்களுக்குப் பிறகு நேற்று அவர் கண்டு பிடிக்கப்பட்டார். பாலைவனத்தில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருந்த அவர் அங்கிருந்த கறுப்பு எறும்புகளை பிடித்து தின்று 6 நாட்களும் உயிர் வாழ்ந்துள்ளார் என்பது தெரியவந்தது. உடனடியாக காரர் ரெக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Leave a Reply
You must be logged in to post a comment.