shadow

கால்வாயில் அனாதையாக கிடந்த ஒருவார குழந்தை

தென்னாப்பிரிககாவில் பிறந்த ஒரு வாரமே ஆன பச்சிளங்குழந்தை கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் போர்ட் எலிசபெத் பகுதியில் 63 வயது கெவி என்பவர் அதிகாலையில் நடைப்பயணம் மேற்கொண்டபோது கால்வாய் அருகே ஒரு பச்சிளங்குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவர் மீட்புப்படையினர்களுக்கு தகவல் கொடுக்க மீட்புப்படையினர் விரைந்து வந்து அந்த குழந்தையை மீட்டனர். பிறந்து ஒரு வாரமே ஆன அந்த குழந்தையை பெற்ற அன்னையே விட்டு சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து உடனடியாக அந்த குழந்தைக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் கண்டெடுக்கப்பட்ட அந்த குழந்தை தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், அந்த குழந்தையை தத்தெடுக்க விரும்புபவர்கள் மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply