சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் இறங்கும் ஓடுபாதை அருகே திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்தின் ரன்வே பகுதியில் அடிக்கடி பறவைகள் பறந்து கொண்டிருப்பதால், அந்த பறவைகளை விரட்டுவதற்காக விமான நிலைய ஊழியர்கள் வெடிகளை வெடிப்பது வழக்கமான ஒரு விஷயம்.இவ்வாறு நேற்று வைத்த வெடிகளில் ஒன்று வெடிக்கும்போது அதில் இருந்து வெளியேறிய தீப்பொறி ஒன்று அருகில் இருந்த காய்ந்த புல்களின் மீது விழ்ந்ததால் அந்த பகுதியில் சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டது.
அந்த நேரத்தில் கோவையில் இருந்து சென்னை நோக்கி வந்த விமானம் ஒன்று தரையிறங்கியதால் உடனடியாக விமான பைலட்டுக்கு தகவல் கொடுத்த கட்டுப்பாட்டு அறையினர் வேறு ஓடுபாதையில் நிறுத்த அறிவுறுத்தினர். இந்நிலையில் தீ விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையில் தீயை அணைத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.