எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் பின்னடைவா? அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என மத்திய பாஜக அரசு சமீபத்தில் அறிவித்து அதற்கான அடிக்கல் நாட்டு விழாவையும் நடத்தியது.
ஆனால் சமீபத்தில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை இப்போதைக்கு அமைய வாய்ப்பில்லை என்று வெளியான தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ‘எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் பின்னடைவு ஒன்றும் இல்லை, மத்திய அரசு சார்பில் மண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக மத்திய அரசு விதித்த 5 நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.