shadow

துரோகத்தை மறைக்கவே ஸ்டாலின் நடைப்பயணம்: அமைச்சர் தங்கமணி

காவிரி விவகாரத்தில் திமுக தான் செய்த துரோகத்தை மறைக்கவே, நடைபயணம் மேற்கொள்வதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நடைப்பயணம் குறித்து அமைச்சர் தங்கமணி விமர்சனம் செய்துள்ளார்.

நாமக்கல் தமிழ்ச்சங்கம் சார்பில் நடைபெற்ற சித்திரைவில் கலந்து கொண்ட அமைச்சர்கள் தங்கமணி பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த திமுக, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை, அரசிதழில் கூட வெளியிட நடவடிக்கை எடுக்காமல், தற்போது ஸ்டாலின் குறைகூறி வருகிறார். காவிரி விவகாரத்தில் திமுக செய்த துரோகத்தை மறைக்கவே மு.க. ஸ்டாலின் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்’ என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

Leave a Reply