பிரதமர் அலுவலக இணை அமைச்சராக இருக்கும் நாராயணசாமியின் புதுச்சேரி வீடு அருகே இன்று காலை பைப் வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் நாராயணசாமியின் வீடு புதுச்சேரி எல்லையம்மன் கோவில் அருகே உள்ளது. இவரது வீட்டு முன்பு இன்று காலை மர்ம பொருள் ஒன்று இருப்பதாக போலீஸாருக்கு வந்த தகவலை அடுத்து போலீஸார் விரைந்து சென்று அந்த மர்ம பொருளை வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் கைப்பற்றி அதை புதுச்சேரி விமான நிலைய ஓடுபாதைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த வெடிகுண்டு எந்த வகையை சேர்ந்தது என்பதை வெடிகுண்டு நிபுணர்கள் ஆராய்ந்து கொண்டு வருகின்றனர்.

அமைச்சர் நாராயணசாமி தற்போது டெல்லியில் இருந்தாலும் அவரது குடும்பத்தினர் புதுச்சேரி வீட்டில்தான் இருக்கின்றனர். இந்த சம்பவத்திற்கு பிறகு அவரது வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply