shadow

அஜித்துக்கு இருந்த தைரியம் ஏன் கமலுக்கு இல்லை? அமைச்சர் சண்முகம்

கடந்த 2010ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது திரையுலகினர் அவருக்கு ‘பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’ என்ற பெயரில் விழா ஒன்றை நடத்தினர். இந்த விழாவிற்கு கோலிவுட் திரையுலகினர் அனைவரும் வந்திருந்தனர். இந்த விழாவில் நடிகர் அஜித் பேசும்போது, ‘விழாவுக்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று அரசியல்வாதிகள் மிரட்டுவதாக முதல்வர் கருணாநிதி முன்பே தைரியமாக கூறினார். அஜித்தின் இந்த கருத்துக்கு எழுந்து நின்று ரஜினி கைதட்டினார்.

இந்த சம்பவத்தை குறிப்பிட்டு தற்போது அமைச்சர் சிவி சண்முகம், கமல்ஹாசனுக்கு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். ‘திமுக ஆட்சியில் இருந்த போது நடிகர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்று அஜித் குமார் பேசியப்போது கமல்ஹாசன் எங்கு சென்றார்? என்றும், நடிகர் அஜித் குமாருக்கு இருந்த தைரியம் கமலுக்கு இல்லாமல் போனது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply