தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த மாதவரம் வி.மூர்த்தி இன்று அதிரடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பி.வி.ரமணா அந்த பொறுப்பிற்கு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சர் பொறுப்பில் இருந்து மட்டுமின்றி திருவள்ளூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் பதவியில் இருந்து மாதவரம் வி.மூர்த்தி நீக்கப்பட்டார். பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டதற்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆனாலும் ஆவின் துறையில் பல்வேறு புகார்கள் எழுந்ததை தொடர்ந்து மூர்த்தியின் அமைச்சர் பதவி பறிபோனதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய பால்வளத்துறை அமைச்சராக இன்று மாலை 6.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் அமைச்சராக ரமணா பதவியேற்க உள்ளார். இவர் ஏற்கனவே வருவாய்த்துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.