shadow

ஜூலை 19 முதல் மேட்டூர் அணை திறப்பு: முதலமைச்சர் அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். ஆனால் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் கடந்த சில ஆண்டுகளாக மேட்டூரில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.

இந்த நிலையில் கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வரும் உபரிநீரின் வரத்து அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு வரும் 19ஆம் தேதி நீர் திறக்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 89 அடியை தாண்டியுள்ளதாகவும், இதனையடுத்தே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply