shadow

images (16)

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 1 கப்,
வெந்தயக்கீரை (மேத்தி) – 1 கப்,
புதினா – 1/4 கப்,
மிளகாய் தூள் – 4 டேபிள்ஸ்பூன்,
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்.

செய்முறை :

• புதினா, வெந்தயக்கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• ஒரு அகலமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரை (மேத்தி), புதினா இலைகளைப் போட்டு, தயிர், மிளகாய் தூள், உப்பு, சீரகம் சேர்த்து நன்கு கலக்கவும்.

• 10 நிமிடங்கள் கழித்து அதில் கோதுமை மாவைச் சேர்த்து சிறிது எண்ணெய் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவான மாவாகப் பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.

• இந்த மாவை சம அளவு உருண்டைகளாக எடுத்து, சப்பாத்தியாகத் திரட்டி, கல்லில் போட்டு இரு பக்கமும் சிறிது எண்ணெய் சேர்த்து சுட்டு எடுக்கவும்.

• சுவையான சத்தான மேத்தி தெப்லா ரெடி.

Leave a Reply