எமோஜியை அடுத்து டிரேட்மார்க்: அசத்தும் மெர்சல் படக்குழுவினர்
இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்திற்கு சமீபத்தில் எமோஜி கிடைத்தது என்பது பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது. தென்னிந்திய சினிமாவுலகில் கிடைத்த முதல் எமோஜி என்பதால் இந்த எமோஜியை விஜய் ரசிகர்கள் இன்னும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது மெர்சல் படத்தின் டைட்டிலுக்கு டிரேட் மார்க் கிடைத்துள்ளது. எனவே இனிமேல் யாரும் தயாரிப்பாளர் அனுமதியின்றி மெர்சல் டைட்டிலை பயன்படுத்த முடியாது. அப்படியே பயன்படுத்தினாலும் இந்த டைட்டிலால் கிடைக்கும் வருமானத்தில் ராயல்டி தர வேண்டும்
எமோஜியை போலவே இந்த டிரேட் மார்க்கும் தென்னிந்திய அளவில் இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இந்த படம் வெளியாக மூன்று மாதங்கள் உள்ள நிலையில் இன்னும் என்னென்ன சாதனை நிகழ்த்தவிருக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Leave a Reply
You must be logged in to post a comment.