விஜய் ரசிகர்களுக்கு விருந்தளிக்க காத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்புடன் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் வரும் 20ஆம் தேதி இந்த படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளதாகவும், இதுகுறித்த பணிகளும் நடந்து வருகிறது
அனேகமாக நேரு ஸ்டேடியத்தில் இந்த ஆடியோ விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த விழாவில் விஜய் ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு இசை விருந்தளிக்க காத்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. அதாவது ‘மெர்சல்’ படத்தின் இரண்டு பாடல்களை அவர் விழா மேடையில் பாடுவார் என்று கூறப்படுகிறது.
இதை மறைமுகமாக ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ஹேமா ருக்மணி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ‘மெர்சல்’ ஆடியோ விழாவில் பல வியப்பூட்டும் சம்பவங்கள் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.