shadow

rajini letterசொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா  22 நாட்களுக்கு  பின்னர் சுப்ரீம் கோர்ட் அளித்த ஜாமீன்  காரணமாக கடந்த சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து ரஜினிகாந்த் மற்றும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளனர்.

ரஜினிகாந்த் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், “நீங்கள் போயஸ் கார்டனுக்குத் திரும்பியதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது நல்ல நேரத்துக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.

நீங்கள் எப்போதும் உடல் ஆரோக்கியத்துடனும், மன அமைதியுடனும் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்” என்று அந்தக் கடிதத்தில் நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி அவர்கள் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தில், “சமீப காலமாக நடந்தவை அனைத்தும் வருத்தத்துக்கு உரியது. உங்களுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு” எல்லா பிரச்சினைகளும் இடர்பாடுகளும் விரைவில் முடிவுக்கு வந்து, மீண்டும் முறைப்படி நிர்வாகத்தில் ஈடுபடுவீர்கள்” என்று ஜெயலலிதாவுக்கு மேனகா காந்தி நம்பிக்கையூட்டியுள்ளார்.

ஜெயலலிதாவின் விடுதலைக்கு தமிழக தலைவர்கள் யாரும் வாயை திறக்காத நிலையில் மத்திய அமைச்சர் ஒருவரும், நடிகர் ரஜினிகாந்தும் துணிச்சலாக வாழ்த்து தெரிவித்துள்ளதால் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply